அரசியல்உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது.

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவை சந்திக்க முடிந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்த்துச் செய்திகளை  தெரிவித்தேன்.

இந்திய இலங்கை உறவுகளிற்கான அவரது அன்பான உணர்வுகளிற்கும், வழிகாட்டுதல்களிற்கும் பாராட்டுக்கள்.

தற்போதைய ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்குவது குறித்தும் இருநாடுகளினது மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும்  ஆராய்ந்தோம்

Related posts

UPDATE: ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது

“முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகைக்கு இடையூறு செய்த கிழக்கு ஆளுனர்?” இம்ரான் மகரூப் அவசர கோரிக்கை

400 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!