உள்நாடு

மறு அறிவித்தல் வரை சிரியா மற்றும் லெபனானுக்கு பயணிக்க வேண்டாம்

சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என இலங்கை பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேட அறிப்பு ஒன்றை விடுத்து வௌிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பிராந்தியங்களில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது குறித்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள கௌரவ தூதரகத்துடன் தொடர்புகளை பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கனடிய ஊடகங்களை பாராட்டி கருத்து தெரிவித்த ஹரீன்

ஜனாதிபதியின் செயலாளருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor

விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ள தேசபந்து தென்னகோன்

editor