அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தல் – நிதியை விடுவிக்கும் உரிமத்தில் கையொப்பமிட்ட ஜனாதிபதி அநுர

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான செலவுத்தொகை என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து நேற்று (28) இரு வேறு கலந்துரையாடல்கள் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போலி SLS தரநிலை சின்னம் கொண்ட ஒரு தொகை தண்ணீர் போத்தல்கள் அழிப்பு

editor

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை சில நாட்களுக்கு தொடரும்