அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (25) காலை பதவியேற்றதன் பின்னரே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

ஒக்டோபர் மாதத்திற்குள் வரிசையை நிறைவு செய்ய முடியும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வரிசையை நீக்குவதற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்த விஜித ஹேரத், அந்த முன்மொழிவுகள் கிடைத்த பின்னர் மாற்று வழிகளுக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

editor

பேரூந்து விபத்து உயிரிழந்தோருக்கு தலா 50,000 ரூபா இழப்பீடு

குச்சவெளி மீனவர் மீதான தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறேன் – முன்னாள் எம்.பி தௌபீக்

editor