உள்நாடு

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

“சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன. பரீட்சை முடிவுகளை இம்மாதத்திற்குள் வௌியிட தயாராக உள்ளோம். பரீட்சை முடிவுகள் விரைவில் வெளியிடுவதே எனது தேவையாக உள்ளது.

பல்வேறு பரிசீலனைகள் மற்றும் இறுதி முடிவுகளை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இன்னும் சில நாட்கள் என்று நினைக்கிறேன்…
அதன்படி, செப்டம்பரில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளோம்.”

Related posts

இலங்கை மக்களுக்காக நான் கடவுளுடன் பேசுகின்றேன் – பாதுக்கே அஜித்தவன்ச தேர்ர்

வக்பு சபைக்கு அழுத்தம் வழங்கும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

editor

இந்திய உர விவகாரம், உண்மைக்குப் புறம்பானது – பி.பீ