அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2460 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை) 2,460 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 930 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,530 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 62 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

சிறிதரன் துயிலுமில்லத்தில் அஞ்சலி!

விமான பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் தடை

2025ஆம் ஆண்டு A/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

editor