அரசியல்உள்நாடு

பொருளாதாரம் ஸ்திரப்படும் வரை நிவாரணப் பொதி வழங்கப்படும் – அனுர

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம் ஸ்திரப்படும் வரை நிவாரணப் பொதியொன்று வழங்கப்படும் என அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொட்டாவ நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.​

மேலும் கருத்து தெரிவித்த அவர்

“நம் நாட்டின் ஏராளமான குடிமக்கள் தங்கள் போக்குவரத்துத் தேவைகளுக்காக அதிகச் செலவுகளைச் செய்கிறார்கள்.

எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.

முதல் பட்ஜெட்டிலேயே உணவு மீதான வட் வரியை நீக்குவோம்.” என்றார்.

Related posts

காலியில் புகையிரதம் ஒன்று தடம்புரள்வு

தேசிய வர்த்தக கோப்பகத்தின் முதல் அச்சுப் பிரதி பிரதமரிடம் கையளிப்பு

editor

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை