அரசியல்உள்நாடு

அனுரவை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (30) காலை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை,  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில்  கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

Related posts

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை