உள்நாடு

5 வகையான உரங்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

தேயிலை பயிர்ச்செய்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட உர மானியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகளை குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, தேயிலைக்கு பயன்படுத்தப்படும் 50 கிலோ கிராம் உர மூட்டையின் விலை 4,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேயிலை செய்கைக்காக பயன்படுத்தப்படும் T 200, T 750, U 709, U 834, T 65 ஆகிய 5 வகையான உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த உர மானியத்தை வழங்குவதற்கான மொத்த செலவு 2,400 மில்லியன் ரூபாவாகும்.

குறித்த பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெறாமல் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தேயிலை சபையின் நிதியை பயன்படுத்தி முழு தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

Update – திடீர் மின்வெட்டு – இன்னும் சில மணித்தியாலங்களில் வழமைக்கு

editor

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு