அரசியல்

ஜனாதிபதியினால் புதிய சட்டமா அதிபர் நியமனம்.

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) நியமித்துள்ளார்.

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய  அவர், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர்
புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.

பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பி. ரணசிங்கவின் புதல்வராவார்.

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

editor

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சென்ற ஆதம்பாவா எம்.பி

editor

எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை – முஜிபுர் ரஹ்மான் கேள்வி பதில் கூறிய பிரதமர் ஹரினி | வீடியோ

editor