உள்நாடு

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.

பதுளை – மஹியங்கனை வீதியில் பதுளை, மெடிதலே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (09) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

அதிவேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களை செலுத்திச் சென்ற இருவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி அநுர அரசாங்கம் சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது – சுமந்திரன்

editor

கொழும்பு, நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

editor

‘யாரும் பின்வாங்க வேண்டாம்’ – விண்ணப்பத் திகதி இன்றுடன் நிறைவுக்கு