உள்நாடு

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு ஒன்று இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து  மாவட்ட பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரின் உதவியுடன் முற்றுகை இடப்பட்டுள்ளது.
குறித்த முற்றுகையில் பருத்தித்துறை மற்றும் நீர்வேலி பிரதேசங்களை சேர்ந்த பெண்களும் ஆண் ஒருவர் உள்ளடங்கலாக வீட்டின் உரிமையாளரான முதியோர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

Related posts

திறமை வாய்ந்த கற்றறிந்த புத்திஜீவிகள் சமூகத்தை உருவாக்க 24 நிர்வாக மாவட்டங்களிலும் 24 திறந்த சமுதாய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்.

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி சார்பற்ற ஆட்சியமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு