உள்நாடுசூடான செய்திகள் 1

விக்டோரியாவில் குளிக்கச்சென்ற திஹாரி தம்பதி ஜனாஸாவாக மீட்பு!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண்(ஆய்ஷா) ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திஹாரிய, ஜெயவர்த்தனபுர பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு இவர்கள் நீராட சென்றுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சேனா கம்பளிப்பூச்சை அழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

விஐபி சேவைகளைப் பயன்படுத்தியதற்கான பணத்தை பசில் இன்னும் செலுத்தவில்லை!

துசித ஹல்லொலுவ வின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் – சந்தேகநபரிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு

editor