உள்நாடு

மே மாதம் முதலாம் வாரத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சு

சாதாரண பரீட்சை தொடர்பான கட்டமைப்புகளை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை 2024 மே மாத தொடக்கத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை இவ்வருடம் மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கான கால அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் – விசேட சுற்றறிக்கை.

கடந்த 24 மணி நேரத்தில் 517 நோயாளிகள் : ஒருவர் பலி

நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்க கூடாது – டக்ளஸ் தேவானந்தா