உள்நாடு

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.

அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

29ஆம் திகதி இலங்கையை தாக்கவுள்ள புயல் – வெளியான எச்சரிக்கை

editor

NMRA விவகாரம் : மென்பொருள் பொறியியலாளரின் பிணை மனு நிராகரிப்பு

பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு