உள்நாடு

நெல்மூட்டைகள்,பசளைகள் களஞ்சியசாலை உடைப்பு- சம்மாந்துறை பொலிஸார் விசாரணை

(UTV | கொழும்பு) –

களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள் 2 பசளைகள் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நேற்று இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்கா 2 கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழு புலன்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் – ஐவர் கொண்ட குழு நியமனம்

எனக்கு உதவாத அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும் – ஆவேசப்பட்ட அலி சப்ரி ரஹீம்!

அலுவலக ரயில்கள் 49 வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில்