உள்நாடு

போதைப் பொருட்களுடன் இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது!

(UTV | கொழும்பு) –

நாடு பூராகவும் விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஷ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போதை சுற்றி வளைப்பின் போது 6600 மில்லி கிராம் ஐஸ் உட்பட 260 போதை தரும் மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவரும் 40 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேக நபரும் கைதாகினர். இச்சுற்றிவளைப்பானது கடந்த நேற்று இரவு சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்ட யூடியூப்பர் – மறுப்பு தெரிவித்ததால் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்திய சம்பவம்

editor

மேடை நடிகராக பிரபலமடைந்த செண்டோ ஹெரிஸ் காலமானார்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேருக்கு நீதிமன்றம் அழைப்பு

editor