உள்நாடு

துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில்!

(UTV | கொழும்பு) –

வரகாபொல, அல்கம பிரதேசத்தில் துப்பாக்கி வெடித்ததில் 15 வயது சிறுவன் காயமடைந்துள்ளான். நேற்று இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். வரக்காபொல பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவன் ஒருவனே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜக்கிய மக்கள் சக்தியில் ஒற்றுமை கிடையாது – அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப்

editor

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

editor

இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களுக்கான அறிவிப்பு