உள்நாடு

டயனா தாக்கப்பட்டமை குறித்து நாளை மறுதினம் கூடவுள்ள குழு!

(UTV | கொழும்பு) –

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு நாளை மறுதினம் கூடவுள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த குழு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்போது, சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள சிசிரிவி காணொளிகளை மையமாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்திலுள்ள வாசிகசாலைக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையே மோதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

editor

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!

முல்லைத்தீவு இராணுவ தாக்குதல் சம்பவம் – ஹர்த்தாலுக்கு ஜீவன் தொண்டமான் எம்.பி முழுமையான ஆதரவு!

editor