உள்நாடு

14 மாதங்களில் 157% அதிகரித்துள்ள மின் கட்டணம்!

(UTV | கொழும்பு) –

ஆகஸ்ட் 10, 2022 முதல் 157 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10, 2022 இல், இலங்கையில் மின்சார கட்டணம் 75%, பெப்ரவரி 15, 2023 இல் 66.2% மற்றும் 20 ஆம் திகதி 18% ஆக அதிகரிக்கப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது மின் கட்டண திருத்தத்தின் பிரகாரம் 14.12 வீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை குறைக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி பதினான்கு மாதங்களில் 157% மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின் சட்டத்தின் 5 மற்றும் 30 பிரிவுகளின்படி, மின் கட்டணத் திருத்தம் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) ஒரு வருடத்தில் இரண்டு முறை செய்யப்படலாம், ஆனால் சட்டத்திற்கு மாறாக மூன்றாவது முறையாக கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம், ஞானசார தேரர் எச்சரிக்கை..!

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் | Live வீடியோ

editor

இலங்கையில் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது