உள்நாடு

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் தடை நீடிப்பு!

(UTV | கொழும்பு) –

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிலும் நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை அடுத்த ஆண்டும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சுற்றறிக்கையை திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடியோ | இஸ்ரேலுக்கு எதிரான காணொளி தொடர்பாக இலங்கை மாணவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 9 மாதங்கள் தடுப்புக்காவல்

editor

எரிவாயு கப்பலின் வருகை மேலும் 3 நாட்கள் தாமதம்

வாக்கெடுப்பு இன்றி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்