வகைப்படுத்தப்படாத

களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகரை உடனடி இடமாற்றம் செய்யுமாறு கட்டளை

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்க வேண்டும் என்றும் தனது அமைச்சின் செயலாளருக்கு அவர் கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று முக்கிய விடயங்களைக் கருத்திற்கொண்டே அமைச்சர் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இனவெறியைத் தூண்டும் காணொளிகளுக்கு யூடியூப் நிறுவனம் தடை

ஸ்ரீ தர்மராஜ விகாரையில் புதிய அறநெறி பாடசாலைக் கட்டடம் ஜனாதிபதியினால் திறப்பு

இந்தியாவில் ஒரே குடும்பத்தினர் 11 பேர் சடலமாக மீட்பு