உள்நாடுமருத்துவம்

 கண் வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடை நிறுத்தம்

(UTV | கொழும்பு) –  கண் வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடை நிறுத்தம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் நேற்று (19) முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபிக் தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சை அறையில் கிருமிகள் பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில், சத்திரசிகிச்சை அறைக்குள் கிருமி எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் விசேட சந்திப்பு

editor

அடுத்த 06 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல்

editor