உள்நாடு

நாடு சுபீட்சமான பாதையில் – சியம்பலபிட்டிய

(UTV | கொழும்பு) –  நாடு சுபீட்சமான பாதையில் – சியம்பலபிட்டிய

ஒரு நாடு என்ற வகையில் இலங்கை சுபீட்சத்தின் பாதையில் உள்ளது என இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடு தற்போது வளமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

நம் நாடு திவாலாகி, ஓரங்கட்டப்பட்ட போதும், இப்போது நல்ல சர்வதேச அங்கீகாரம் பெற்று வருகிறது.

“2022 ஆம் ஆண்டு புத்தாண்டின் தொடக்கத்தில், நமது நாடு திவாலானது என முன்னிலைப்படுத்தப்பட்டதால், நாங்கள் எங்கள் கடனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது. கடந்தாண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி நம் நாட்டின் திவால் நிலையைக் குறித்தது என சொல்வது வருத்தமாக இருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது, ​​நம் நாடு வளமாக இல்லாவிட்டாலும், அது இப்போது வளமான பாதைக்குள் நுழைந்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ட்ரம்பின் வரிக் கொள்கை தொடர்பில் அரசாங்கத்திடம் இன்னும் தெளிவான திட்டமொன்று இல்லை – சஜித் பிரேமதாச

editor

இரண்டு மீன்பிடி படகுகள் விபத்து – மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்

editor

மின்சாரம் இன்றி மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் அவதி.