உள்நாடு

கைதிகள் தப்பியோட்டம் – 02 கைது

(UTV | கொழும்பு) –  கைதிகள் தப்பியோட்டம் – 02 கைது

தல்தென திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற 09 கைதிகளில் இருவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

09 இளைஞர்கள் இன்று (17) அதிகாலை சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

எவ்வாறாயினும், அவர்களுள் இரு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் , ஏனைய 07 பேரைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்

ஜனாதிபதி அநுர இன்று இரவு சீனா பயணம்

editor

மைத்திரியின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை