உள்நாடு

நாட்டில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் வரி செலுத்த வேண்டுமா?

(UTV | கொழும்பு) – நாட்டில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் வரி செலுத்த வேண்டுமா?

இலங்கை சர்வதேச விமான நிலையம் அல்லது துறைமுகத்தில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் விலகல் வரி செலுத்த வேண்டும் என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதாவது, புதிய அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கு புதிய வரிகளை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விலகல் வரியானது பழையது எனவும் இது பயணிகளின் விமான டிக்கெட்டில் உள்ளடங்கிய கட்டணமாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

செலுத்த வேண்டிய விலகல் வரி தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதனடிப்படையில், மத்தள விமான நிலையத்தின் ஊடாக புறப்படும் பயணிகளுக்கு குறித்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சரித ஹேரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய நியமனம்

editor

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது