உள்நாடு

ஜனவரி பெப்ரவரி மாதங்களில் லிட்ரோ விலை குறையலாம்!

(UTV | கொழும்பு) –  ஜனவரி பெப்ரவரி மாதங்களில் லிட்ரோ விலை குறையலாம்!

அடுத்த வருடம் ஜனவரி பெப்ரவரி மாதங்களில் உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைவடையக்கூடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைவடையக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவிற்கான விலையை கணிசமான அளவு அதிகரித்திருக்க வேண்டும்.
எனினும், நுகர்வோர் நலன் கருதி நட்டத்தை ஏற்றுக் கொண்டு 250 ரூபாவால் மாத்திரம் விலையை உயர்த்த தீர்மானித்தாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்

பணிப்புறக்கணிப்பை தொடர்வதற்கு தபால் ஊழியர்கள் தீர்மானம்

editor

ஜனாதிபதி செயலகத்திற்கு உள்நுழையும் வீதிகளுக்கு பூட்டு, பலத்த பாதுகாப்பு