உள்நாடு

  02 வயது குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

(UTV | ஹோமாகம) –     கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஹோமாகம பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தையின் இளம் தந்தை ஒருவர் தனது வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோமாகம, வடக்கு பிட்டிபன, ஹெட்டிகொடவில் வாடகை வீட்டில் வசிக்கும் தோமஸ் திஸாநாயக்க கலன மதுசங்க என்ற 28 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக மீகொட பொலிஸார்

கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் இவர், கடந்த சில நாட்களாக வேலை இல்லாத நிலையில் மனமுடைந்துள்ளர் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாகவும் மனைவியிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் , குடும்பம் வாழ சரியான வழி இல்லாததால் 15 முறைக்கு மேல் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்து கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தயாராகும் அரச ஊழியர்கள்

இலவச டேட்டாவைப் பெற முடியும் என வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்.

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என்நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.