உள்நாடு

புதையல் தோண்டிய தொல்பொருள் உத்தியோகத்தர் கைது

(UTV | திருகோணமலை) –    புதையல் தோண்டிய தொல்பொருள் உத்தியோகத்தர்  உட்பட 6 பேர்  கைது

திருகோணமலை மாவட்ட அபயபுர பகுதியில் புதையல் தோண்டிய குற்றத்தின் பெயரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடையத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில்
குறித்த பகுதியில் ( அபயபுர – லெனின் மாவத்தையில்) வீடொன்றில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த போது வீட்டு உரிமையாளர் உட்பட06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் காலி, நீர்கொழும்பு, ,அம்பாறை, தீகவாபி,கந்தளாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 24, 35,, 28, 22 வயதையுடையவர்கள் எனவும் ,

இவ் 06 பேரையும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இந்தியாவில் இருந்து ஒருதொகை அரிசி இலங்கைக்கு

மின்சாரக் கட்டணம் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

editor

ஆசன பட்டி சட்டம் கடுமையாகும் – மதிக்காத பேருந்துகளின் உரிமங்களை இரத்து செய்வோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor