உலகம்

 இருமல் மருந்தினை உட்கொண்ட 200 குழந்தைகள் மாரணம்!

(UTV |இந்தோனேஷியா ) –   இருமல் மருந்தினை உட்கொண்ட 200 குழந்தைகள் மாரணம்!

இந்தோனேஷியாவில் இருமல் மருந்தினை உட்கொண்ட 200 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சின் மீது உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து, இது தொடர்பில் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சிரப் அடிப்படையிலான பாராசிட்டமோல் மருந்துகளில் காணப்படும் எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் ஆகிய இரண்டு பொருட்கள் தான் குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில இருமல் மருந்துகளின் தயாரிப்புகளில் கிளிசரினுக்கு மாற்றாக இத்தகைய மலிவான கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கிளிசரினுக்கு மாற்றாக இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதால், அதை உட்கொள்பவர்களுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

ஸ்பெயினில் 22,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

அமைதிப்படைக்கு பரிசாக இரண்டு இலட்சம் தடுப்பூசி