உள்நாடு

ஜனவரி 15 முதல் வடக்கிடக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –     பழுதடைந்துள்ள புகையிரதப் பாதையை சீரமைக்கும் பணிகள் காரணமாக ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடை க்கலநாதன் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை மன்னார், யாழ்ப்பாணம், காங்கேசன் துறை ஊடாக பயணிக்கக்கூடிய ரயில் பாதையை இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நல்ல பாதையாக பெற்றுத்தர முடியுமெனவும் தெரிவித்தார்.

மேலும், புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடை க்கலநாதனுடன் இது தொடர்பில் ஆலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Related posts

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டமொன்று இல்லாமையினால் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது – மீண்டும் வங்குரோத்து நிலையை அடையக் கூடாது என்றே பிரார்த்திக்கின்றேன் – சஜித் பிரேமதாச

editor

´இந்த்ர´ சுட்டுக் கொலை

வடக்கு கிழக்கு மக்கள் ஹர்த்தாலை நிராகரித்து அரசியல்வாதிகளுக்கு நல்ல செய்தி சொல்லியுள்ளார்கள் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

editor