உள்நாடு

டயானா கமகேவின் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு.

(UTV | கொழும்பு) –  சுற்றுலா துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிரதிவாதியான டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு குறித்த நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

விஜயதாச ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு

editor

முகக்கவசம் அணியத் தவறிய 18 பேர் கைது

புதிய பணவியல் விதிகள் நிறைவேற்றப்படும் – பிரதமர்