உள்நாடு

இன்று 12 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (16) இரவு 10.00 மணி முதல் நாளை (16) காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு உரிய காலத்தில் நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பில் நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டம் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி – மூவர் படுகாயம்

editor

நிரபராதி என்பதாலேயே சகோதரர் ரியாஜ் விடுவிக்கப்பட்டார்

கொவிட் – 19 தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கம் அறிமுகம்