உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு மூலிகைக் கஞ்சி

(UTV | கொழும்பு) –   இன்று(03) முதல் பாடசாலை மாணவர்களுக்காக மூலிகைக் கஞ்சி வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படுவதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமென சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக 1000 பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி – சாரதி வைத்தியசாலையில்

editor

பாடசாலைகளின் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

நாடளாவிய திரையரங்குகள் 2ஆம் திகதி திறக்கப்படும்