உள்நாடு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஊவா, வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுகின்ற அதேவேளை, இடியுடன் கூடிய மழையின்போது, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

Related posts

அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்ய தயாரில்லை – சஜித்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு

சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார்