உள்நாடு

“ஒழுக்காற்று நடவடிக்கைகளை விட நாட்டின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவேன்” – மைத்திரி

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்கத்தை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விட, நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்த்து, மக்களின் பசி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை இருக்கும் நிலையில் மீட்பதே தவிர வேறு எதற்கும் முன்னுரிமை இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். மக்களின் பட்டினி, வாழ்க்கை நிலைமைகள் மற்றும் பொருளாதார சிரமங்களுக்கு ஒரு நாடாக எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பதே அனைவரின் முன் உள்ள சவால் என்றும் அவர் கூறினார்.

அதற்காக பல்வேறு அமைப்புகள், சிவில் அமைப்புகள், படித்த இளைஞர்கள் இணைந்து பெரிய திட்டங்களை தயாரித்து அரசிடம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இளைஞர்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள், வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள வல்லுநர்களின் கருத்துகளை எடுக்க தனது கட்சி விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தினார். வேறு எதற்கும் முன்னுரிமை இல்லை என்றும் அவர் கூறினார்.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

editor

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

பதில் பிரதம நீதியரசராக புவனேக அலுவிஹாரே