விளையாட்டு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ரொபின் உத்தப்பா ஓய்வு

(UTV |  சென்னை) – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ரொபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக ரொபின் உத்தப்பா அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 46 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரொபின் உத்தப்பா 934 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்துடன், 13 இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடி 249 ஓட்டங்களையும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

Related posts

இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெங்களப்பதக்கம்

மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி

அவுஸ்திரேலிய அணியுடன் மோதிய இந்திய அணிக்கு திரில் வெற்றி