உள்நாடு

சில பகுதிகளில் இன்றும் கனமழை

(UTV | கொழும்பு) –   மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 100க்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட மாகாணத்தில் அவ்வப்போது மழையுடனான காலநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது கி.மீ. 50 மணிக்கு மேல் காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

Related posts

மலையக மக்களின் தொடர் வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

editor

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor