உள்நாடு

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று (15) இரவு இந்த திருத்தம் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

Related posts

பாராளுமன்ற குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று

முதல் தடவையாக சிங்கள மொழியில் பாடப்படும் கஸீதா [VIDEO]

கத்தி முனையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – வௌியான திடுக்கிடும் தகவல்கள்

editor