உள்நாடு

இந்த மாதம் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  இம்மாதம் 27ஆம் திகதியுடன் முடிவடையும் அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்படாது என்ற நிலை உருவாகியுள்ளது.

காரணம் கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 27ம் திகதிக்குள் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கடந்து, ஒரு மாதம் கழிவதற்குள் மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும்.

இந்தச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டால், ஒரு மாதத்துக்கும் மேலாக அது மீண்டும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

எனவே ஆகஸ்ட் 27ம் திகதிக்கு பிறகு இந்த சட்டம் தானாகவே ஒழிந்து விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related posts

கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

அநுர அலை இன்னும் குறையவில்லை – அதனை குறைத்து மதிப்பிட முடியாது – கொழும்பில் போட்டியிடுவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்

editor