உள்நாடு

ருஹுணு குமாரி தடம் புரள்வு

(UTV | கொழும்பு) – ருஹுணு குமாரி கடுகதி புகையிரதம் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமே இன்று (15) காலை பூஸ்ஸ பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து ஹிக்கடுவை வரை புகையிரதங்களை மட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த வழித்தடத்தில் ஓடும் ரயிலை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது

சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட ஆறு இலட்சத்து 27 ஆயிரம் சுவரொட்டிகள் நீக்கம்

editor

ஊரடங்குச் சட்டத்தை இனியும் நீடிப்பதில்லை