உள்நாடு

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று பாராளுமன்றத்தில்

(UTV | கொழும்பு) –  அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடங்கிய முற்போக்கான சரத்துக்களை மீண்டும் இயற்றும் அதே வேளையில் 20வது திருத்தத்தை ரத்து செய்வதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு பேரவையின் அமைப்பில் மாற்றங்கள், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அரசுப் பதவியில் இருப்பதைக் கட்டுப்படுத்துதல், அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறை உள்ளிட்டவை புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெறுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது பல கலந்துரையாடல்களை நடத்தினார்.

Related posts

இதுவரை 885 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

பாராளுமன்ற நடவடிக்கைகள் செவ்வாய் வரை ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய!