உள்நாடு

தபால் கட்டணமும் அதிகம்

(UTV | கொழும்பு) –  சாதாரண தபால் கட்டணம் 15 ரூபாவாக 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய திருத்தங்களுடன் கூடிய வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை தபால் மா அதிபர் மூலம் ஊடக அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, இம்மாதம் 15ம் திகதி முதல் புதிய கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் என நம்புவதாகவும், இம்மாதத்துக்குள் கட்டண திருத்தம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், புதிய திருத்தங்களின்படி, அடிப்படை தபால் கட்டணம் 50 ரூபாயாக உயரும், ஆனால் புதிய திருத்தங்களின்படி, பார்சல் கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்கள் ஏற்கனவே இருந்த தொகையில் இருந்து குறைக்கப்படும்.

வெளிநாட்டு தபால் கட்டணம் மற்றும் பார்சல் கட்டணங்களும் கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. முன்னதாக உள்நாட்டு அஞ்சல் கட்டணங்கள் 15 ஜூன் 2018 அன்று திருத்தப்பட்டது.

Related posts

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்

editor

ரயில் போக்குவரத்து தொடர்பில் வெள்ளியன்றே தீர்மானம்

அமைச்சுகளின் விடயதானங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

editor