விளையாட்டு

இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்

(UTV | கொழும்பு) – இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் தலைவர் ஜெய் ஷா கூறுகையில், இலங்கை அதன் ஹோஸ்டிங் உரிமையை தொடர்ந்து கொண்டிருக்கும்.

ஏனெனில் இலங்கை வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை, இந்த ஆண்டு டுவென்டி-20 முறையில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்றுக்குப் பிறகு, வெற்றி பெறும் அணி இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை எதிர்கொள்ளும் பிரதான போட்டியில் சேரும்.

Related posts

இலங்கை அணிக்காக களத்தில் போராடும் சந்திமல்!!

உலக கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய ஆட்டங்கள் குறித்து முழு விவரம்

இலங்கைக்கு அதிரடி வெற்றி