உள்நாடு

அடுத்த வாரம் நாட்டுக்கு ஆறு எரிவாயு கப்பல்கள்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரத்தில் மேலும் ஆறு எரிவாயு கப்பல்கள் நாட்டினை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இம்மாதத்தில் எரிவாயு இருப்பு 33,000 மெட்ரிக் டன்னாக இருக்கும்.

பொதுமக்களுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சந்தையில் வெளியிடப்பட்ட உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை சுமார் 80,000 ஆக இருந்த போதிலும், தற்போது அதனை 100,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு – சந்தேகநபர் கைது.

கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

editor