உள்நாடு

மஹிந்த, பசில் இருவருக்கும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வௌிநாடு செல்ல தடை

(UTV | கொழும்பு) –  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வௌிநாடு செல்ல தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் L.T.B. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

editor

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மேலும் 221 பேர் கைது

ராஜகுமாரி மரணம் தொடர்பில் மனோவுக்கும், அரசு தரப்பு எம்பிகளுக்குமிடையில் மோதல் (VIDEO)