உள்நாடு

எரிபொருள் இல்லாததால் சீனிக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – லங்கா சீனி நிறுவனத்திற்கு சொந்தமான பெல்வத்தை சீனி தொழிற்சாலையை எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்நிலைமையினால் கரும்புகளை கொண்டு வர வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வெட்டப்பட்ட கரும்புகளை மாத்திரம் அரைப்பதற்கு பதப்படுத்தப்பட்டு வருவதாகவும் பெல்வத்தை தொழிற்சாலையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி வஜிர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையின் டர்பைன் இயந்திரம் செயலிழக்கச் செய்யப்பட்டு, டீசலில் இயங்கும் ஜெனரேட்டர் மூலம் தொழிற்சாலை இயங்குகிறது.

தொழிற்சாலை மற்றும் பிற வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் நான்காயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது டீசல் கிடைக்காததால் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் அழைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் மூவர் கைது

editor

ஐரோப்பிய நாடுகளுக்கான அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்

பேருந்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

editor