உள்நாடு

‘எரிபொருள் கப்பல் வரும் திகதியினை எம்மால் உறுதி செய்ய முடியாதுள்ளது’

(UTV | கொழும்பு) – வங்கி நடவடிக்கைகள் மற்றும் விநியோக பிரச்சினைகள் காரணமாக எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வரும் திகதிகளை அறிவிக்க முடியாதுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த எரிபொருள் கப்பல்கள் இலங்கை துறைமுகங்களை வந்தடையும், தரையிறங்குவதற்கு முன்னர் எரிபொருள் விநியோகம் தொடரும், பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் அடுத்த வாரம் முழுவதும் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல்

இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் குறித்து IMF அதிரடி அறிவிப்பு

editor

பட்டாசுக் காயங்களுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை