உள்நாடு

புகையிரதக் கட்டணத்தில் திருத்தம்

(UTV | கொழும்பு) –   புகையிரதக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொண்டு ரயில்வே திணைக்களத்திற்கு அனுமதியளிக்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே புகையிரத பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று முதல் பல பாதைகளில் புதிய ரயில்கள் சேர்க்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

“நாட்டு மக்களுக்கு அரசு செய்து வரும் சேவைக்கு ரயில்வே துறை நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன். தற்போது பேருந்து கட்டணத்தில் 20% முதல் 24% வரை மட்டுமே ரயில் கட்டணமாக வசூலிக்கிறோம். எனவே எங்களின் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. டீசல் விலையில் அதிகரிப்பு, ஆனால் நாங்கள் எங்கள் வருவாயில் பெரிய அதிகரிப்பைக் காட்டவில்லை, நாங்கள் மிகக் குறைந்த தொகைக்கு பயணிகளை ஏற்றிச் செல்கிறோம்.”

Related posts

ஓட்டமாவடியில் தீப்பற்றி எரிந்த வீடு – சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர் கைது!

editor

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

யாழ். கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் படுகாயம்.