உள்நாடு

டில்லி பொதுக்கூட்டத்தில் உரையாற்ற மஹிந்தவுக்கு சுப்பிரமணியன் சுவாமியிடம் இருந்து அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வருமாறு பாரதீஜ ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

“எனது நண்பரும் இலங்கைத் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை இந்தியாவுக்கு வருமாறும், டில்லியில் இடம்பெறும் பொதுக் கூட்டத்தில் பேசவும், இந்து மற்றும் புத்த கோயில்களுக்குச் செல்லவும் அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளேன். அவர் பருவமழைக்கு முன் ஜூன் மாதத்தில் வருவார் என்று நம்புகிறேன்.”

Related posts

ஜெரோமின் மனுவை நிராகரிக்குமாறு ஆட்சேபனை முன்வைப்பு!

மலையக ரயில் சேவை பாதிப்பு

துருக்கி நாட்டின் “ஜனநாயக மற்றும் தேசிய ஒற்றுமை தினம்” இன்று கொழும்பில் அனுஷ்டிப்பு !

editor